Thiruvarur Bridge Collapse | பாலம் இடிந்து விழுந்து பள்ளி மாணவிகள் படுகாயம் - போராட்டத்தில் குதித்த உறவினர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு பள்ளி மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சேகல் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் முள்ளி ஆறு வழியாக நடந்து சென்றபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த இருவரும் பொதுமக்களால் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தையடுத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், அலட்சியத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.