தமிழ்நாடு

நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

தந்தி டிவி
திருவண்ணாமலையில் தனியார் நகைக்கடை நிறுவனத்திடம், திமுக பிரமுகர் பன்னீர் செல்வம் என்பவர் போலி வில்லங்க சான்று மூலம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்றார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தில் பங்கு இருப்பதாக ராதா என்ற பெண் கூறி உள்ளார். இப்பிரச்சினையை தீர்க்க மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு பன்னீர் செல்வம் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், பன்னீர் செல்வம், அவரது மனைவி மாதவி மற்றும் ராதா ஆகியோர் கூட்டாக சேர்ந்து நாடகமாடி நிலத்தை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து புகாரின் பேரில், பன்னீர் செல்வம், மனைவி மாதவி, கூட்டாளி ராதா ஆகியோர் மீது மோசடி, கூட்டுசதி, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை