தமிழ்நாடு

கற்களை வீசி மோதிக்கொண்ட இரு தரப்பினர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டு கல்வீசி மோதிக்கொண்ட விவகாரத்தில், 4 பேரை கைது செய்த போலீசார், 20 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

வாகனங்களில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால், செங்கம் அடுத்த புதுப்பட்டு ஊராட்சியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றி இரு தரப்பும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், 20 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில், நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி