திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயில் கிரிவலப்பாதை மற்றும் குளத்தின் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு குடியிருப்புகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் ஆய்வு செய்யும் படி கூறியிருந்தார். இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, பட்டா உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்றார்.