தமிழ்நாடு

அடுத்தடுத்து குண்டு வீச்சு... அலறிய திமுக நிர்வாகி வீடு... டிரைவருக்கு வெட்டு... நடுங்கிய சோழவரம்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வசித்து வருபவர் அபிஷா ப்ரியா வர்ஷினி. திமுகவின் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவரான இவரது வீட்டின் மீது, கடந்த 15 ஆம் தேதி மர்மநபர்கள் நாட்டு வெடி குண்டு வீசினர். தொடர்ந்து, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரி பார்க்கிங் மீது நாட்டு வெடி குண்டு வீசிய கும்பல், லாரி ஓட்டுநர் ஒருவரை அரிவாளால் வெட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பிரபல ரவுடி டியோ கார்த்திக் உட்பட மூவரை கைது செய்த நிலையில், தொடர் தலைமறைவில் இருந்த சந்திரன் என்பவரையும் தற்போது கைது செய்திருக்கின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்