தமிழ்நாடு

தனியார் மருத்துவமனை செய்த செயல்.. வேதனையில் கண்ணீருடன் கதறி அழுத தாய்.. உடனே எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

பெத்திக்குப்பம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 30 வயதாகும் மகேஷ், கடந்த 10-ம் தேதி இரவு, தொடர் வாந்தி ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்தது. அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், மகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையை மூடக்கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகேஷின் தாயார் விஜயா,

தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை