தமிழ்நாடு

Thiruvallur | புறம்போக்கு நிலத்தில் விவசாயம் - பொக்லைன் எந்திரத்துடன் வந்த பொதுப்பணித்துறை..

தந்தி டிவி

Thiruvallur | புறம்போக்கு நிலத்தில் விவசாயம் - பொக்லைன் எந்திரத்துடன் வந்த பொதுப்பணித்துறை.. அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய ஒபுளாபுரத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியை ஒட்டிய புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் நெல் பயிரிட்டிருப்பதாக தனிநபர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பொக்லைன் எந்திரத்துடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் சென்றபோது, அவர்களை வழிமறித்த விவசாயிகள் அறுவடை செய்யும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர், எந்திரங்களை சிறைப்பிடித்தும் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அவர்களை அப்புறப்படுத்தி விட்டு, எந்திரம் மூலம் அதிகாரிகள், பயிர்களை அழித்தனர்.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்