தமிழ்நாடு

திருவாவடுதுறை மடத்தில் தொடரும் சர்ச்சை - ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும் துறவிகள்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த சுவாமிநாத தம்பிரான் விதிகளை மீறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த சுவாமிநாத தம்பிரான், விதிகளை மீறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாததால் சுவாமிநாத தம்பிரான் ராஜினாமா செய்த‌தாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்துஅவரிடம் இருந்த காவி உடை, உத்திராட்சம் உள்ளிட்டவை பறிக்கப்பட்டன. இந்த நிலையில், காசிக்கு சென்ற அவர் மீண்டும் காவி உடை அணிந்தபடி, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்த‌தாக வாட்ஸ் ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிகர், சுவாமிநாத தம்பிரான் முழுமையாக துறவறம் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி