தமிழ்நாடு

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை

திருபுவனத்தில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி
திருபுவனத்தில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். மதமாற்றத்தை தடுத்ததால் ராமலிங்கம் கொலை நடைபெற்றது என இந்து அமைப்புகள் கூறியதைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஏழு நாட்கள் தங்கள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தஞ்சாவூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருபுவனம் ராமலிங்கம் வீடு உள்ள தூண்டில் விநாயகம் பேட்டை பகுதி மற்றும் சம்பவம் நடைபெற்ற முஸ்லீம் தெரு என தேசிய புலனாய்வு பிரிவு அமைப்பினர் விசாரனை நடத்தி சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்