#sivagangai | #Thiruppuvanam | #viralvideo தீயாய் பரவும் திருப்புவனம் மருத்துவமனை வீடியோ...அதிர்ச்சியில் மக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் தலையில் காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இல்லாத சூழலில் தூய்மை பணியாளரே முதலுதவி செய்ததாக கூறப்படுகிறது. மருத்துவ பயிற்சி இல்லாத நபர் சிகிச்சை அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பால உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.