திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மோகன் பகவத் உறுதி
திருப்பரங்குன்றம் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்த முடியும் - ஆனால் அது நீதிமன்றத்தில் உள்ளதால் தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புவதாகவும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், மாநிலத்தில் உள்ள இந்துக்களின் பலத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும், திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.