தமிழ்நாடு

திருமழிசை புறநகர் பேருந்து நிலைய பணிகள் - ஆர்டிஐ-யில் வெளியான தகவல்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை புறநகர் பேருந்து நிலையம் பணிகள் டிசம்பர் மாதம் முழுமை பெறும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

திருமழிசை, குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 486.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் எப்போது நிறைவு பெறும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. திருமழிசை பேருந்துநிலைய பணிகள் டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என ஆர்டிஐ பதில் அளித்துள்ளது. கூடுதல் தளம், கழிப்பிட வசதி, குளிர்சாதன வசதி போன்ற கூடுதல் பணிகள் திட்டமிடப்பட்ட பட்டுள்ளதால் இன்னும் 50 சதவீத பணிகள் முடிக்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருமழிசையும், கிளாம்பாக்கம் பேருந்துநிலையமும் ஒரே நேரத்தில் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே