தமிழ்நாடு

செயல்பாட்டிற்கு வந்தது திருமழிசை சந்தை - விறுவிறுப்பாக தொடங்கியது காய்கறி விற்பனை

சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 200 கடைகள் அமைக்கப்பட்டு மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே லாரிகளில் காய்கறிகள் வரத் தொடங்கிய நிலையில், வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்த பிறகே, அனுமதிக்கப்பட்டது. வியாபாரிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கோயம்பேடு சந்தையை போலவே, திருமழிசைக்கும் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்