தமிழ்நாடு

செயல்பாட்டிற்கு வந்தது திருமழிசை சந்தை - விறுவிறுப்பாக தொடங்கியது காய்கறி விற்பனை

சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 200 கடைகள் அமைக்கப்பட்டு மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே லாரிகளில் காய்கறிகள் வரத் தொடங்கிய நிலையில், வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்த பிறகே, அனுமதிக்கப்பட்டது. வியாபாரிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கோயம்பேடு சந்தையை போலவே, திருமழிசைக்கும் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு