தமிழ்நாடு

திருச்செந்தூரில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை - பால்குடம் எடுத்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு

உலக நன்மைக்காக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் பால்குடம் மற்றும் காவடி எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி
உலக நன்மைக்காக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், திரிசுதந்திரர்கள் சார்பில் பால்குடம் மற்றும் காவடி எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து, அங்கிருந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் பால்குடம் எடுத்தும், சூரிய காவடி தூக்கியும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று சுப்ரமணிய சுவாமி கோவிலை அடைந்தனர். பின்னர் அவர்கள் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பூஜைகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்