தமிழ்நாடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் - பிப்ரவரி 22 ஆம் தேதி திறப்பு விழா

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், பிப்ரவரி 22 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் மணிமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டினார். இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் அமைக்கப்படுவதுடன் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி