தமிழ்நாடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் - பிப்ரவரி 22 ஆம் தேதி திறப்பு விழா

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், பிப்ரவரி 22 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் மணிமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டினார். இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் அமைக்கப்படுவதுடன் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்