தைப்பூசம் மற்றும் பெளர்ணமியையொட்டி திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது... திருச்செந்தூர் கடற்கரையில் பெருந்திரளாக குவிந்த பக்தர்கள் மணலை கொண்டு கோபுரம் அமைத்து பூக்கள் தூவி தரிசனம் செய்தனர்.. கடற்கரையில் பெளர்ணமி நாளில் இரவு முழுவதும் கண்விழித்து முருகனை அதிகாலையில் வழிபட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர்.