திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
வரும் 22ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அய்வு நடத்தப்பட்டது. இதில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.