தமிழ்நாடு

திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி...

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த நந்தகுமார், அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் திருடனை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவன் அதே பகுதியை சேர்ந்த வேங்கையன் என்பது தெரியவந்தது. பின்னர் அவனை கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த நிலையில், போலீசார் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு