தமிழ்நாடு

திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி...

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த நந்தகுமார், அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் திருடனை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவன் அதே பகுதியை சேர்ந்த வேங்கையன் என்பது தெரியவந்தது. பின்னர் அவனை கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த நிலையில், போலீசார் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ