தமிழ்நாடு

திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி...

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த நந்தகுமார், அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் திருடனை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவன் அதே பகுதியை சேர்ந்த வேங்கையன் என்பது தெரியவந்தது. பின்னர் அவனை கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த நிலையில், போலீசார் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு