தமிழ்நாடு

"தலித் சமூகத்தை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்" -ஆளுநர்

தந்தி டிவி

"தலித்துகளை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்" தமிழகத்தில் தலித் சமூகத்தினரை தேர்தல் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் சமூக நீதி பற்றி நாள்தோறும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், தலித் சமூகத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அரசு உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 50 சதவீத மாணவர்களால் 2-ஆம் வகுப்பு பாட புத்தகத்தைக் கூட படிக்க முடியவில்லை என்று கூறிய ஆளுநர், திறமையில்லாத மாணவர்களை உருவாக்கி விட்டு, அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது எத்தனை நாட்களுக்கு உதவும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதிக்காக தலித் சமூகத்தினர் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஆளுநர், அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கான நேரம் வந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை