தேவர் ஜெயந்தி அன்று நடந்த சம்பவம் - பரவும் காட்சி வடசென்னை பகுதியில் இருந்து தேவர் ஜெயந்தி நிகழ்விற்காக சென்ற இளைஞர்கள்,வாகனங்களில் அட்டகாசம் செய்தபடி சென்ற நிலையில், அசோக் பில்லர் அருகே, ஒரு இளைஞர் மற்றொரு இளைஞரை கத்தியால் தாக்குவது போன்ற காட்சி வைரலானது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.