பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்118ஆவது ஜெயந்தி விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அலகு குத்தி, பால்குடம் எடுத்த பொதுமக்கள், ஊர்வலமாக நினைவிடத்திற்கு வந்தனர்.