தமிழ்நாடு

"ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தாமதமில்லை" - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை ஆணைய வழக்கறிஞர் பார்த்தசாரதி அளித்துள்ள விளக்கத்தில், ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கப்பட்ட போது யார் யாரெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என எந்த பட்டியலையும் அரசு தரப்பில் தரவில்லை என தெரிவித்துள்ளார். ஆணையமே தானாக முன்வந்து போயஸ்கார்டனில் துவங்கி, அப்பலோ மருத்துவமனை வரை விசாரணைக்கு தொடர்புடையவர்கள் என கருதிய, 110 பேரிடம் ஆணையம் விசாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னும் தொடர்புடையவர்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், அதன்படி குறைந்தது நான்கு மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

எனவே, ஆணையம் விசாரணையில் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் எவ்வித காலதாமதமும் செய்யவேண்டிய அவசியம் ஆணையத்திற்கு இல்லை என்றும் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர் பார்த்தசாரதி விளக்கம் அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை