தமிழ்நாடு

சென்னையில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை கிண்டி முதல் பெருங்களத்தூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறை சார்பில் 800 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

சென்னை கிண்டி முதல் பெருங்களத்தூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறை சார்பில் 800 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பயன்பாட்டை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். போக்குவரத்து விதிகள் குறித்த கையேட்டை பள்ளி மாணவர்களுக்கு அவர் வழங்கினார். அப்போது பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகமும், பாதுகாப்பு மிக்க மாநகரமாக சென்னையும் விளங்குவதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்