தமிழ்நாடு

தென் பெண்ணையாற்றில் மணல் அள்ளியதாக புகார் - லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பண்ருட்டி அருகே தென் பெண்ணையாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
பண்ருட்டி அருகே தென் பெண்ணையாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் மேல்குமாரமங்கலம் தென் பெண்ணையாற்றில் மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மணல் ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், லாரியை காவல் நிலையம் எடுத்துச்சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை