தமிழ்நாடு

பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மாணவ, மாணவிகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மீனாட்சிபுரம், பொட்டல்கலம், அணைக்கரைப்பட்டி, மீனா விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில் செல்வது வழக்கம். இந்நிலையில், பொட்டல் கலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலரை வழியிலேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தபோதிலும், போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்