தமிழ்நாடு

குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார் உதித் சூர்யா : தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரை, தேனி அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த மாணவர் உதித் சூர்யா, குடும்பத்துடன் திருப்பதியில் கைது செய்யப்பட்டார். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதித் சூர்யாவின் த‌ந்தைக்கு ஆள்மாறாட்டத்தில் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்டமாக, உதித்சூர்யா குடும்பத்தினர் தேனிக்கு அழைத்து வரப்பட்டனர். சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து நடைபெறும் விசாரணைக்கு பிறகு, இந்த ஆள்மாறாட்டத்தில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளதா உள்ளிட்ட விவரங்களை தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை