தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் பயிற்சி - தேனி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

தந்தி டிவி

காவல் துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள், கால்நடை வளர்ப்பவர்கள் வரவேண்டாம் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக துப்பாக்கிச் சூடும் பயிற்சி மையத்தில் பயிற்சி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேனி மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி வரும் ஜனவரி 09ம் தேதி முதல் பிப்ரவரி 08ம் தேதி வரை நடைபெறுகிறது.

எனவே, தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் இப்பகுதிக்குள் வரவேண்டாம் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்