தமிழ்நாடு

பெரியாறு அணை : 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாய், வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாய், வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். இன்று முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டத்தின் 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதேபோல் பி.டி.ராஜன் கால்வாயிலும் வினாடிக்கு 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் 5 ஆயிரத்து 146 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு