தமிழ்நாடு

பெரியாறு அணை : 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாய், வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாய், வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். இன்று முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டத்தின் 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதேபோல் பி.டி.ராஜன் கால்வாயிலும் வினாடிக்கு 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் 5 ஆயிரத்து 146 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி