தமிழ்நாடு

தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள அறையில், இரண்டாம் ஆண்டு பி.காம் படித்த கேரளா மாநிலம், வண்டிபெரியாரை சேர்ந்த சைஜூ என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவன் கல்லூரி விடுதியில் கஞ்சா பயன்படுத்தியது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவரின் அறையில் இருந்து மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் கஞ்சா போதை பொருள் கைபற்றப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"