தமிழ்நாடு

காட்டுத் தீயில் இருந்து காப்பாற்றிய ஊரடங்கு - பசுமையாக காட்சி தரும் மேற்குத் தொடர்ச்சி மலை

ஊரடங்கு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியும் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியும் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் காட்டுத் தீ எரிந்த நிலையில் அதன் பின்பு ஊரடங்கு அறிவிப்பு வெளியான நாட்களில், காட்டுத் தீ ஏற்படவில்லை. கோடைகாலத்தில் எப்போதும் காட்டுத்தீ ஏற்பட்டு பசுமை இழந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியானது, தற்போது ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் யாரும் செல்லாததால், பச்சைப் பசேல் என காட்சியளிக்கிறது. இந்த மலை பகுதியில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை