தமிழ்நாடு

காட்டுத் தீயில் இருந்து காப்பாற்றிய ஊரடங்கு - பசுமையாக காட்சி தரும் மேற்குத் தொடர்ச்சி மலை

ஊரடங்கு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியும் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியும் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் காட்டுத் தீ எரிந்த நிலையில் அதன் பின்பு ஊரடங்கு அறிவிப்பு வெளியான நாட்களில், காட்டுத் தீ ஏற்படவில்லை. கோடைகாலத்தில் எப்போதும் காட்டுத்தீ ஏற்பட்டு பசுமை இழந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியானது, தற்போது ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் யாரும் செல்லாததால், பச்சைப் பசேல் என காட்சியளிக்கிறது. இந்த மலை பகுதியில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்