தமிழ்நாடு

மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்

தேனி அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

தேனி அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்,மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போடி அருகே உள்ளஷ கோடாங்கிபட்டி என்ற இடத்தில் நிகழ்ந்தது. தனுஷ்கோடி என்பவரின் 27 வயது மகன் கண்ணன் என்பவர், தனது மனைவி மகாலட்சுமிக்கு தனது வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவக்குழுவினர், தொப்புள் கொடியை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியும் கேட்க மறுத்து, கண்ணன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆபத்தை உணர்ந்த மருத்துவக்குழுவினர், உடனடியாக ஆம்புலன்ஸ்களை வரவழைத்து, தயார் நிலையில் வைத்தனர். பல மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் கண்ணன் சம்மதம் தெரிவித்ததால், குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், மகனுக்கு உதவிய தந்தை தனுஷ்கோடி என்பவர் கைது செய்யப்பட்டார். யூ- டியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த திருப்பூர் பெண் விவகாரம், கோவை - ஹீலர் பாஸ்கர் விவகாரம் என அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தேனி அருகே நிகழ்ந்த இந்த நிகழ்வு, மருத்துவ துறையினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்