தமிழ்நாடு

சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று நகை திருட்டு - காவல் அதிகாரி குழந்தையிடம் கைவரிசை

சுப நிகழ்ச்சிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை பறித்து செல்லும் கில்லாடி கொள்ளையன் - காவல்துறை அதிகாரி ஒருவரின் குழந்தையிடம் கைவரிசை காட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

தந்தி டிவி
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணியாற்றிவரும் ச‌சிக்குமார். கடந்த ஒன்றாம் தேதி வடபழனியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த 4 சவரன் நகை மாயமானதை தொடர்ந்து அங்கிருந்த வீடியோ பதிவுகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இதில் மர்ம நபர் ஒருவர் விளையாடி கொண்டிருந்த குழந்தையிடம் செயினை பறிப்பது பதிவாகியிருந்த‌தை தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். இதில் செயினை பறித்து சென்றது வேலூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரிய வந்த‌து. இதையடுத்து கூடுவாஞ்சேரியில் பதுங்கியிருந்த புருஷோத்தமனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த‌னர். அவரிடம் இருந்து 16 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. விசாரித்த‌தில் இதே போன்று சுப நிகழ்ச்சிகளில் விளையாடும் குழந்தைகளை குறிவைத்து திருடி வந்த‌து தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புருஷோத்தமன் மீது 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்