தமிழ்நாடு

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் அஞ்சலை முகர்ஜி. இவரது வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்த மர்ம கும்பல் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளைடியத்து சென்றது. இதேபோல் அடுத்தடுத்த 5 வீடுகளிலும் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியதாக கூறப்பட்டது. ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம், நகைகள், பணம் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு மட்டும் சுமார் 5 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில் காரில் வந்த கும்பல் ஒன்று இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ