அடகு வைத்த நகையை திருடிச் சென்ற வழக்கு - மேலும் ஒருவர் கைது சென்னையிலுள்ள கோயம்பேடு அருகே அடகு கடையில், பொதுமக்கள் அடகு வைத்த நகையை திருடிச் சென்ற வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யபட்டார். ஆழ்வார் திருநகர் பகுதியில் பொதுமக்கள் அடகு வைத்த நகையை, கடையின் உரிமையாளர் சுனில் என்பவர் எடுத்துக்கொண்டு தப்பியோடினார். சுனிலை கைது செய்து விசாரித்த நிலையில், அவரது நண்பர் அசோக் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அசோக்கை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்