தமிழ்நாடு

மனைவியுடன் பேசிய இளைஞர் - கண்டித்தும் கேட்காததால் ஆத்திரம் - மச்சானுடன் மாமன் போட்ட பிளான்

தந்தி டிவி

சின்னமனூர் அருகே சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காபில் கான். இவர், அலாவுதீன் என்பவரது மனைவியுடன் தொடர்ந்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அலாவுதீனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், அலாவுதீன் தனது மனைவியின் தம்பி முகமது சமிர் என்பவருடன் சேர்ந்து, காபில் கானை கண்டித்துள்ளார். எனினும், இருவரும் தொடர்ந்து பேசியதால் ஆத்திரமடைந்த அலாவுதீன் மற்றும் முகமது சமிர் ஆகியோர் சேர்ந்து, காபில் கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அலாவுதீன் தனது மனைவி மூலமாக காபில் கானை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, முகமது சமிருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து காபில் கானின் உறவினர் அளித்த புகாரின் பேரில் அலாவுதீன், அவரது மனைவி மற்றும் முகமது சமிர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்