மன்னார்குடியில் எய்ட்ஸ் நோய் இருந்ததை மறைத்து திருமணம் செய்து மோசடி செய்த கணவன் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். ஹெச்ஐவி பாதிப்பை மறைத்து திருமணம் செய்து ஏமாற்றியதாக, இளம்பெண் கொடுத்த புகாரில், மன்னார்குடி மகளிர் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில், தலைமறைவான அப்பெண்ணின் கணவர் உட்பட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே கர்ப்பமாக இருந்த போது, குழந்தைக்கும் தொற்று இருந்த நிலையில், உரிய மருந்துகளை உட்கொண்டதால், தற்போது தொற்று இல்லை என கூறப்படுகிறது.