தமிழ்நாடு

சூறாவளி காற்றினால் ஆசிரியை மீது விழுந்த மரம் - சிகிச்சை பலனின்றி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

குன்னூரில் மரம் விழுந்ததில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

குன்னூரில் மரம் விழுந்ததில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்றும் வீசுவதால், குன்னூர் ஜெகதளா ஓதனட்டி கிராமத்தில் கற்பூர மரம் ஒன்று சரிந்து விழுந்தது. அப்போது, வண்டிச்சோலை அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மகேஸ்வரி எனும் ஆசிரியை மீது மரம் விழுந்தது. தலை மற்றும் கை கால்களில் பலத்தகாயமடைந்த அவர், ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்