தமிழ்நாடு

பையில் கிடைத்த பொக்கிஷம்.. திறந்து பார்த்த பொது பயங்கர ஷாக்! - நண்பரோடு வாயடைத்து நின்ற தருணம்

தந்தி டிவி

தருமபுரியில், காகிதம் நிரப்பிய பையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கருத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் டிராவல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பண இரட்டிப்பு தொடர்பாக செல்போனில் அடையாளம் தெரியாத இருவர் அறிமுகமாகினர். 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக 13 லட்சம் ரூபாயாக மாற்றி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இந்நிலையில், நல்லம்பள்ளி சந்தையில் இருசக்கர வாகனத்தில் வந்து 10 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு, ஒரு பையை கொடுத்து விட்டுச் சென்றனர்.

இதையடுத்து, சுரேஷும், அவரது நண்பர் ராஜேந்திரனும் பையை திறந்து பார்த்தபோது அதில் வெறும் பேப்பர் கட்டுகள் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்