பறவைக் காய்ச்சலுக்கு திருநீற்றுப்பச்சிலை மருந்து கண்டுபிடிப்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பறவைக் காய்ச்சலைக் குணப்படுத்த, திருநீற்றுப்பச்சிலை மூலம் அரிய வகை மூலிகை பொடியைக் கண்டறிந்துள்ளார். ஜெர்மனியில் இயற்பிய வேதியியலில் பி.எச்.டி முடித்த இவர், தனது குழுவினருடன் இணைந்து தயாரித்த இந்த மூலிகை மருந்து, பாதிக்கப்பட்ட கோழிகளை மூன்றே நாட்களில் குணப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஈரோடு மற்றும் பெங்களூரு கோழிப் பண்ணைகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.