தமிழ்நாடு

ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பூசாரி திடீர் மரணத்தால் பரபரப்பு

ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பூசாரி திடீர் மரணத்தால் பரபரப்பு

thanthitv

ஜீவசமாதி அடைவதாக கூறியவருக்கு நேர்ந்த நிலைமை... ஓரு புறம் போலீசார் எதிர்ப்பு...மறுபுறம் சீடர்கள் ஆதரவு... என்ன நடந்தது....

சேலம் அருகே ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பூசாரி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டையாம்பட்டி கஞ்சமலை அடிவாரம் பகுதியில் சந்திரபிரகாசம் என்பவர் ஜிவசமாதி அடைவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசார், ஜீவசமாதி அடைவது சட்டத்திற்கு புறம்பானது என கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு துங்க சென்ற அவர், மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

ஆனால் பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஜிவசமாதி அறிவித்து விட்டதால் தியான நிலையில் உயிரிழந்துவிட்டதாக அவரது சீடர்கள் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்