தமிழ்நாடு

வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது சடலமாக வந்த நபர்.. ஓவர்டேக் செய்தபோது நேர்ந்த சோகம்

தந்தி டிவி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாரியும்-காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தனியார் வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சையைச் சேர்ந்த சீதாராமன் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பணியின் காரணமாக கோவை சென்று விட்டு மீண்டும் தனது காரில் தஞ்சை நோக்கி திரும்பி வந்துக் கொண்டிருந்தார். கார் குளித்தலை அருகே வந்த போது, முன்னால் சென்ற பேருந்தை சீதாராமன் முந்த முயன்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மீது, கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சீதாராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு