தமிழ்நாடு

வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது சடலமாக வந்த நபர்.. ஓவர்டேக் செய்தபோது நேர்ந்த சோகம்

தந்தி டிவி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாரியும்-காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தனியார் வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சையைச் சேர்ந்த சீதாராமன் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பணியின் காரணமாக கோவை சென்று விட்டு மீண்டும் தனது காரில் தஞ்சை நோக்கி திரும்பி வந்துக் கொண்டிருந்தார். கார் குளித்தலை அருகே வந்த போது, முன்னால் சென்ற பேருந்தை சீதாராமன் முந்த முயன்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மீது, கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சீதாராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்