தமிழ்நாடு

பெண் கவுன்சிலர் வீசிய வலை - சிக்கிய ஆண் கவுன்சிலர் - ரூ.2.50 கோடி.. மொத்தமும் அபேஸ்

தந்தி டிவி

ராசிபுரம் நகராட்சியில் 12-வது வார்டு சுயேட்சை பெண் கவுன்சிலராக இருக்கும் சசிரேகா மீது, மோகனூர் பேரூராட்சி திமுக செயலாளரும் கவுன்சிலருமான செல்லவேல், நாமக்கல் குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், பழைய கார்களை பாதி விலைக்கு வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் சசிரேகா இரண்டரை கோடி ரூபாய் வாங்கி விட்டு மோசடி செய்ததாக செல்லவேல் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பெயரில், சசிரேகாவை நாமக்கல் குற்றப்பிரிவு காவல் துறையினர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சசிரேகாவின் கணவர் சதீஷ்குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்துறையின் முழுமையான விசாரணைக்குப் பிறகு சசிரேகா கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்