தமிழ்நாடு

பெட்ரோல் பங்க்கில் Phone -Pe ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி ஓனருக்கு விபூதி அடித்த மேனேஜர்

தந்தி டிவி

கன்னியாகுமரி அருகே பெட்ரோல் பங்கின் போன்-பே ஸ்கேனர் ஸ்டீக்கரில், தனது வங்கி கணக்கின் ஸ்கேனர் ஸ்டீக்கரை ஒட்டி பங்க் மேலாளர் 23 லட்ச ரூபாய் திருடிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் லாசர். பத்மநாபபுரம் அரண்மனை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இவர், பங்கில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளிடம் போன்-பே மூலமாக பணம் வசூல் செய்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தனது வங்கி கணக்கை ஆய்வு செய்த லாசர், வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு வருடமாக செலுத்திய பணம் ஏதும் தனது கணக்கில் வரவாகாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். விசாரணையில், பங்கில் மேலாளராக பணிபுரிந்த வந்த நிஜில் பிரேம்சன் என்பவர், தனது வங்கி கணக்கு போன்-பே ஸ்கேனர் ஸ்டிக்கருக்கு பதிலாக, அவரது வங்கி கணக்கு ஸ்டிக்கரை ஒட்டி இருந்ததும், தினமும் போன்-பே மூலம் வரவாக பணத்திற்கும் போலி ரசீது காண்பித்து மோசடி செய்ததையும் கண்டுபிடித்துள்ளார். இதன்படி, கடந்த ஒரு வருடம் மட்டும் சுமார் 23 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் வரை நிஜில் பிரேம்சன் திருடியது தெரியவர, லாசர் போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்