திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து அரசுப் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. பயணிகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து செல்லாம்பாளையம் பகுதியில் புளியமரத்தில் மோதியது. இதில், ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் என 14 பேர் காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து மீட்டு, ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிந்த அலங்கியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்