தமிழ்நாடு

குருபூஜையில் நடந்த பயங்கரம்.. வேடிக்கை பார்த்ததால் தப்பிய உயிர்.. தூள் தூளான கார்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது பாண்டியர்களின் 222 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில்,பங்கேற்க ஆட்டம் பாட்டத்துடன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் விழாக்களுக்கு பயன்படுத்தும்

நாட்டு வெடிகுண்டை சாலையில் வீசினர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது வெடி விழுந்ததில் காரின் மேற்கூரை பலத்த சேதம் அடைந்தது. காரின் உரிமையாளர்

ஞானப்பிரகாசம் வேடிக்கை பார்க்க காரை விட்டு இறங்கி வெளியே நின்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த காளையார்கோவில் போலீசார் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், சிசிடிவி காட்சிகளை கொண்டும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

ADMK | EPS |முதல் பிரச்சாரத்தில் முதல் முதலாக EPS சொன்ன வார்த்தை மயிலாப்பூரில் அதிரடி காட்டிய அதிமுக

BREAKING | TVK | "நா வரேன்..." தான் இறங்கும் தொகுதியில்? முதல் பிரசாரம் - நாள் குறித்த விஜய்

ADMK | EPS | திமுகவை இறங்கி அடிக்கும் EPS.. பேசப் பேச அதிரும் மயிலாப்பூர்

PMK | முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு அரசியல் களத்தை அதிர விட்ட பாமக