திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்வு
திருப்போரூரில் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றான திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்வு நடைபெற்றது.
இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து
ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு துரியோதனன் படுகளத்தை கண்டுகளித்தனர்.
கடந்த 12ஆம் தேதி திரௌபதி அம்மன் கோயிலின் அக்னி வசந்த உற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் , துரியோதனன் படுகளம் நிகழ்வுக்காக கோயில் வளாகத்தில் 100 அடி நீளமுள்ள துரியோதனன் மண் சிலை உருவாக்கப்பட்டு போர்க்கள காட்சி நடித்து காட்டப்பட்டது.