தமிழ்நாடு

பெண்ணின் கண்ணீரைத் துடைத்த ஆளுநர் பன்வாரிலால்...

திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, உணவு துறை அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். திருவாரூர் சன்னதி தெரு பகுதியில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டபோது, அருள்ஜோதி என்ற பெண், வீடுகளை இழந்து பள்ளிகளில் தங்கியுள்ளதாகவும், இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறி கதறி அழுதார். அவரது கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய ஆளுநர், அனைத்து நிவாரண உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து, மன்னார்குடி அருகே காத்தாங்குளம் என்ற கிராமத்தில், புயலால் சாய்ந்த உயர்மின் அழுத்த கோபுரம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்