வெண்பாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின் கோவையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 8 வயது சிறுமி வெண்பாவின் பெற்றோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். கோவையில் திமுக கவுன்சிலர் சந்தோஷின் 8 வயது மகள் வெண்பா மூளைச்சாவு அடைந்தார். சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்ததால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. இந்நிலையில் கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், வெண்பாவின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். துயரமான சூழலிலும் உடல் உறுப்புகளை தானம் அளித்ததற்காக தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.