தமிழ்நாடு

மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் கேரளா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மீதமுள்ள

6 நாட்களில் 2 பிரிவாக 3 நாட்கள் வீதம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டிணம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அங்கு நாளை வரை மீன்பிடிக்க செல்ல கூடாது என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்