தமிழ்நாடு

தேர் இழுக்கும் போது மனிதர்கள் செய்த `கடவுள்’ செயல்

தந்தி டிவி

தேரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பக்தர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடிப்பூரத் தேரோட்டத்தின் போது, ஆம்புலன்ஸ்க்கு பக்தர்கள் வழிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாடானை பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு ரத வீதியில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது, அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்த நிலையில், தேரின் வட சங்கிலியை தூக்கியபடி சாலை ஓரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி விட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை